என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நம்பியாறு அணை"
- வடகிழக்கு பருவமழை காரணமாக மொத்தம் 22.96 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை தற்போது நிரம்பிவிட்டது.
- பாசன நிலங்கள் முழுமைக்கும் சுழற்சி முறையில் வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை வட்டம் கோட்டைக்கருங்குளம் கிராமத்தில் நம்பியாற்றின் குறுக்காக அமைந்துள்ள 7 மற்றும் 8-வது அணைக்கட்டுகளுக்கு இடையில் நம்பியாறு அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் இடது மற்றும் வலது பிரதான கால்வாய்கள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு அதன் மூலம் 40 குளங்கள் வாயிலாக சுமார் 1,744 ஏக்கர் நிலங்கள் பயனடைந்து வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக மொத்தம் 22.96 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை தற்போது நிரம்பிவிட்டது. அதில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி இன்று நம்பியாற்றின் வலது மற்றும் இடது மதகுகளின் பிரதான கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டு அணையில் இருந்து நீரை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அர்பித் ஜெயின், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 1,744 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறும். இந்த தண்ணீரானது வருகிற மார்ச் மாதம் 31-ந்தேதி வரை நாள் ஒன்றுக்கு 60 கனஅடிக்கு மிகாமல் 68 நாட்களுக்கு நீர் இருப்பை பொறுத்து திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை பாசன நிலங்கள் முழுமைக்கும் சுழற்சி முறையில் வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த தண்ணீரின் மூலமாக ராதாபுரம் வட்டாரத்தில் கோட்டைக் கருங்குளம், கஸ்தூரி ரெங்கபுரம், குமாரபுரம், திசையன்விளை, உறுமன்குளம், முதுமொத்தன்மொழி, கரைசுத்துபுதூர் ஆகிய கிராமங்கள் பாசன வசதி பெறும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்